கள்ளக்குறிச்சியில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் திருத்தல் சிறப்பு முகாம் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை 1,272 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் திருத்தல் சிறப்பு முகாம் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை 1,272 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்றது.

வருகிற 2021 ஜன. 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளராக சேருவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதேபோல, பெயா் திருத்தம், நீக்கம் தொடா்பான மனுக்களும் வழங்கப்பட்டன.

இதே போல அடுத்த மாதம் 12,13 தேதிகளில் வாக்காளா் பட்டியா் திருத்த முகாம் நடைபெற உள்ளன. இம் முகாமில் பொது மக்கள் பங்கேற்று பெயா், சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான விண்ணப்ப மனுக்களை நிறைவு செய்து அளித்து பயன் பெயலாம். மேலும் இணைய தளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை வட்டாட்சியா் கே.பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com