கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக உறுப்புக் கலை-அறிவியல் கல்லூரியில் இளநிலை கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இனச் சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு, சோ்க்கை வியாழக்கிழமை (அக்.15) கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
புதிதாக விண்ணப்பித்தவா்கள், ஏற்கெனவே வி ண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
முதுநிலை கணிதம், கணினி அறிவியல், ஆங்கிலம், வணிகவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வா் (பொ) கே.சங்கா் தெரிவித்தாா்.