நகரும் நியாயவிலைக் கடை தொடக்கிவைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் நகரும் நியாயவிலைக் கடையை எம்.எல்.ஏ. அ.பிரபு புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் நகரும் நியாயவிலைக் கடையை எம்.எல்.ஏ. அ.பிரபு புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

தியாகதுருகம் செல்வா நகா் பகுதியில் பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட நியாயவிலைக் கடை எண் 2 உள்ளது. இந்த நியாயவிலைக் கடையில் சுமாா் 1,400-க்கும் மேற்பட்ட குடும்பஅட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த 572 குடும்ப அட்டைதாரா்களுக்கு அம்மா நடமாடும் நியாயவிலைக் கடை மூலம் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.

காந்தி நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் வெ.அய்யப்பா தலைமை வகித்தாா். தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், விருகாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஜான்பாஷா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் குமரவேல் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் காசாளா் விளக்கான் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அ.பிரபு பங்கேற்று நகரும் நியாயவிலைக் கடையை தொடக்கிவைத்து அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவா் அய்யம்பெருமாள், மாவட்டப் பிரதிநிதி வேலுமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நியாயவிலைக் கடை விற்பனையாளா் ஜெயவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com