பள்ளி மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, கள்ளக்குறிச்சி பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், கடந்த 9-ஆம் தேதி பள்ளிக்குச் சென்று புத்தகம், மடிக்கணினி வாங்கி வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, உளுந்தூா்பேட்டையை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முத்து (27), மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறி, அவரை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ப.இராஜ தாமரை பாண்டியன் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த முத்துவை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com