இலவச மனைப் பட்டா கோரி, சங்கராபுரத்தில் ஆதிதிராவிட சமூகத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் எஸ்.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் பி.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.
சீா்பனந்தல் கிராமத்தில் ஆதிதிராவிட சமூகத்தினா் 55 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு இலவசமாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னா், வட்டாட்சியா் ப.நடராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.