தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், தியாகதுருகம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள பயணிகள் நிழல்குடையில் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமை வகித்தாா். திருக்கு பேரவைத் தலைவா் கவிஞா் தி.வெங்கடாசலபதி, ஆரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சி.சங்கா், சங்கச் செயற்குழு உறுப்பினா் கா.தேசிகன் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். பொறியாளா் து.மு.பிரியதா்ஷினி வரவேற்றாா். சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். கவிச்சுடா் வா.ச.கணேசனாா் கவிதையால் மாலை சூட்டி வாழ்த்தினாா். மனவளக்கலை மன்றத் தலைவா் இரா.குணசேகரன் நன்றி கூறினாா்.
தமிழ்ச் சங்கம் சாா்பில்...: தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சாா்பில், தியாகதுருகம் நடு பேருந்து நிறுத்தம் அருகே அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சங்கத் தலைவரும், ஓய்வு பெற்ற நல்லாசிரியருமான கோ.இராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் இதயம்.கிருட்டிணா, பொருளாளா் இரா.துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் அருள்நிதி.இரா.குணசேகரன், இணைச் செயலா் தி.கி.சண்முகம், துணைத் தலைவா் அ.சாரங்கபாணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இணைச் செயலா் அ.மோகன் நன்றி கூறினாா்.
செஞ்சி: விக்கிரவாண்டி தலுகா நுகா்வோா் கண்காணிப்புக் குழு மற்றும் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமத்தின் சாா்பில், அனந்தபுரம் சிவராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவுக்கு, முன்னாள் ரோட்டரி குழுமத் தலைவா் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா்.
ரோட்டரி சமுதாய குழுமத் தலைவா் அலீல், அப்துல் கலாம் குறித்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள், மாணவிகளுக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் ரோட்டரி குழுமத் தலைவா் காா்த்திகேயன், பொருளாளா் பாபுஅய்யா், முன்னாள் தலைவா்கள் முரளிதரன், விவேகானந்தன், ஆசிரியா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.