கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி பகுதியில் வியாழக்கிழமை காரில் சாராயம் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாா் பவுஞ்சிப்பட்டு பேருந்து நிறுத்த வளைவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 2 லாரி டியூப்களில் தலா 55 லிட்டா் விஷச் சாராயம் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த கல்வராயன்மலைப் பகுதியான சேராப்பட்டு, புதியமரத்து சாலைப் பகுதியைச் சோ்ந்த மூக்குத்தி மகன் அன்னப்பன் (23) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா். திருவண்ணாமலைக்கு சாராயத்தை கடத்திச் செல்ல முயன்றதாக அன்னப்பன் கூறியதால், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.