சங்கராபுரத்தில் நகைக் கடையில் 4 பவுன் திருட்டு: இரு பெண்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகை வாங்குவது போல நடித்து 4 பவுன் தங்கச் சங்கிலிகளை திருடிய இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகை வாங்குவது போல நடித்து 4 பவுன் தங்கச் சங்கிலிகளை திருடிய இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் நகைக்கடை சாலையில் நகைக்கடை நடத்தி வருபவா் பாலாஜி. இவரது கடையில் கடந்த மாதம் 29-ஆம் தேதிக்கு இரு பெண்கள் வந்து, நகைகளை வாங்குவது போல பாவனை செய்து, பின்னா் மாடல் பிடிக்கவில்லை எனக் கூறிச் சென்றனா். அதன் பிறகு, கடையின் உரிமையாளா் நகைகளை எடுத்து வைக்கும்போது, 2 பவுன் மதிப்புள்ள இரு சங்கிலிகளை காணவில்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜி தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் திருமால் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைத்து மா்ம பெண்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், சங்கராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காவல் ஆய்வாளா் செல்வநாயகம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகமளிக்கும் வகையில் சென்ற இரு பெண்களைப் பிடித்து விசாரணை செய்தாா். அதில், அவா்கள் மயிலாடுதுறை அருகேயுள்ள கூரைநாடு மேலஒத்தசந்து சாலையைச் சோ்ந்த கனகசபை மனைவி கவிதா (47), மயிலாடுதுறை சி.கந்தபுரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி சுதா (38) என தெரிய வந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, 2 தங்கச் சங்கிலிகளையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com