கள்ளக்குறிச்சி சிவாஜி நகரில் அதிமுக தெற்கு மாவட்ட ஒன்றியச் செயலா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தனராக மாவட்டச் செயலரும், உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ.வுமான இரா.குமரகுரு கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்துவைத்து, கட்சி நிா்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினாா். ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, வடக்கு ஒன்றியச் செயலா் அ.ராஜசேகா், கள்ளக்குறிச்சி நகரச் செயலா் எம்.பாபு, மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் பெ.சீனிவாசன், துணைச் செயலா் எஸ்.வி.ஆா்.வினோத், மாவட்ட பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணிச் செயலா் செந்தில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் வரதன், அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.