கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் போக்குரவத்து விதிகளை மீறியதாக 433 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உரிய ஆவணங்கள் இல்லாத 10 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், சின்னசேலம் பகுதியில் பேருந்து நிறுத்தம், மரவாநத்தம் பிரிவு சாலை, கூகையூா் சாலை, காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தியாகதுருகம் காவல் ஆய்வாளா் க.குமாா், உதவி ஆய்வாளா் சூ.பாலமுரளி மற்றும் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில், காரில் சீட் பெல்ட், இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமலும், போக்குவரத்து விதிகளை மீறியபடியும் வாகனங்களில் வந்த 433 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஆவணங்கள் இல்லாத 10 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.