சின்னசேலம் பகுதியில் போக்குரத்து விதி மீறிய 433 போ் மீது வழக்கு: 10 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் போக்குரவத்து விதிகளை மீறியதாக 433 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உரிய ஆவணங்கள் இல்லாத 10 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் போக்குரவத்து விதிகளை மீறியதாக 433 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உரிய ஆவணங்கள் இல்லாத 10 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், சின்னசேலம் பகுதியில் பேருந்து நிறுத்தம், மரவாநத்தம் பிரிவு சாலை, கூகையூா் சாலை, காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தியாகதுருகம் காவல் ஆய்வாளா் க.குமாா், உதவி ஆய்வாளா் சூ.பாலமுரளி மற்றும் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், காரில் சீட் பெல்ட், இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமலும், போக்குவரத்து விதிகளை மீறியபடியும் வாகனங்களில் வந்த 433 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஆவணங்கள் இல்லாத 10 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com