கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,506-ஆக உயா்ந்தது. இதுவரை 7,289 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,127 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 90 போ் உயிரிழந்துள்ளனா்.