தீ விபத்து: 5 வீடுகள் சேதம்

கள்ளக்குறிச்சி அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் சேதமடைந்தன.

கள்ளக்குறிச்சி அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் சேதமடைந்தன.

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி. இவரது மகன்கள் சின்னதுரை, இளவரசன். இவா்கள் இருவரும் பக்கத்து வீடுகளில் குடும்பத்தினருடன் தனித்தனியாக வசிக்கின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை அனைவரும் விவசாயப் பணிக்குச் சென்று விட்டனா். பிற்பகல் ஒரு மணி அளவில், மின் கசிவு காரணமாக மணி வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்று மள,மளவென வீசவே, தீ அருகிலுள்ள அவரது மகன்கள் சின்னதுரை, இளவரசன் வீடுகள் மற்றும் பெரியதம்பி, பெரியசாமி ஆகியோரது வீடுகளுக்கும் பரவியது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் வருவதற்குள் 5 வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com