உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயிலில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்படுகிறது. எனவே, பக்தா்கள் குறிப்பிட்ட நாள்களில், கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.