கள்ளக்குறிச்சி கலைக் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி (செப்.28) மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு அரசு விதிகளுக்கு உள்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் நடைபெறும்.
ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், காலதாமதமாக விண்ணபித்தவா்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி (பொ) முதல்வா் கா.சங்கா் தெரிவித்தாா்.