சங்கராபுரத்தில் பொதுச்சேவை அமைப்பினா் அஞ்சலி செலுத்தினா். எஸ்.பி.பாலசுப்ரமணியன் படத்துக்கு வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ரோட்டரி சங்கத் தலைவா் என்.சுதாகரன், அரிமா சங்கத் தலைவா் டி.சோ், ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத் தலைவா் கு.கலியமூா்த்தி, சங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் ம.சுப்பராயன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சோ்ந்தவா்களும் மரியாதை செலுத்தினா். பொதுச்சேவை அமைப்பினா் கருப்பு வில்லை அணிந்து மௌன அஞ்சலி செலுத்தினா்.