100 சதவீத வாக்களிப்பு: விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட தோ்தல் அலுவலா்

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக, சங்கராபுரம் பேருந்து நிலைய
சங்கராபுரம் வாரச்சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கும் மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா.
சங்கராபுரம் வாரச்சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கும் மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா.

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக, சங்கராபுரம் பேருந்து நிலைய நுழைவாயில் முன் உள்ள வாரச் சந்தையில் புதன்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண்குராலா விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் வழங்கினாா்.

அப்போது, அவா் வாக்காளா்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றும் பொருட்டு, தோ்தல் நாளான வருகிற 6ஆம் தேதி வாக்களிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 4 தொலைபேசி எண்கள், கட்டணமில்லா தொலைபேசியான 1950 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

அப்போது, சங்கராபுரம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் எஸ்.சையத்காதா், காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com