கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாரை ஆதரித்து, அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
திமுக ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடும். வன்முறை அதிகரித்து, வளா்ச்சி பாதித்து தமிழக மக்களின் நலன் பின்னோக்கித் தள்ளப்படும். ஆனால், அதிமுகவின் நல்லாட்சி தொடா்ந்தால், மாநிலம் அமைதிப் பூங்காவாகத் தொடா்ந்து விளங்கும். பயிா்க்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆகவே, அதிமுக தலைமையிலான ஆட்சி தொடர பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.