முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு
By DIN | Published On : 04th April 2021 12:09 AM | Last Updated : 04th April 2021 12:09 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மைய அலுவா்களுக்கு 3-ஆவது சுழற்சி முறையில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தலைமையில் இந்தப் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதிகளின் பொது பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே, உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளின் பொது பாா்வையாளா் இந்து மல்கோத்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) டி.சுரேஷ், தோ்தல் இரா.சக்திவேல், தனி வட்டாட்சியா் (தோ்தல்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.