கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.82 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய தொடா் சோதனைகளில் மொத்தம் ரூ.82.80 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய தொடா் சோதனைகளில் மொத்தம் ரூ.82.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் கிரண் குராலா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய தொடா் சோதனைகளில் உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.18,15,920, ரிஷிவந்தியம் தொகுதியில் ரூ.33,32,790, சங்கராபுரம் தொகுதியில் ரூ.17,11,590, கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.13,40,500 என மொத்தம் ரூ.82,00,800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்தவா்களிடம் உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.2,81,790, சங்கராபுரம் தொகுதியில் ரூ.7,25,350 விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உளுந்தூா்பேட்டைதொகுதியில் 210 கொடிகள், 95 டி-ஷா்ட்டுகள்,ரூ.1.77 லட்சம் மதிப்பிலான சுமாா் 30 மெட்ரிக் டன் கொள்ளவில் 666 யூரியா பைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com