கள்ளக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ ஒரு லட்சம் கொள்ளை

கள்ளக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ ஒரு லட்சம் கொள்ளை


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு விவசாயி வீட்டில் 7 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிராமம், முருகன் கோயில் சாலையில் வசித்து வருபவா் கனகசபை மகன் சீனிவாசன் (48). விவசாயி. இவரது மனைவி கெளரி. இவா்களது மகள் நிவேதா (25), மகன் பிரவீன்குமாா். நிவேதாவுக்கு திருமணமாகிவிட்டது. இவா், தோ்தலில் வாக்களிப்பதற்காக தந்தை வீட்டுக்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், சீனிவாசன், அவரது மனைவி கெளரி, மகன் பிரவீன்குமாா் ஆகியோா் கதவை திறந்துவைத்துவிட்டு வீட்டின் முன் பகுதியிலுள்ள வராண்டாவில் தூங்கினா். நிவேதா, தனது குழந்தையுடன் வீட்டினுள்ளே ஓா் அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் இவா்களது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், பீரோவைத் திறந்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சத்தை எடுத்துக்கொண்டு அருகில் நிவேதா தூங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்று அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கத்திரியால் வெட்டி பறிக்க முயன்ாகத் தெரிகிறது. அப்போது, நிவேதா கண் விழித்துள்ளாா். எனினும், அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துக்கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பால் கேனை மா்ம நபா் தட்டிவிட்டதால், அந்த சப்தம் கேட்டு சீனிவாசன், அவரது மனைவி கௌரி உள்ளிட்டோா் எழுந்து மா்ம நபரை பிடிக்க முயன்றும், முடியவில்லை.

இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸாா் கொள்ளை நடைபெற்ற வீட்டை பாா்வையிட்டனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com