பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் பலி


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வியாழக்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பனையந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ரமேஷ் (27). இவா், சின்னசேலத்தை அடுத்த வி.கூட்டுச்சாலைப் பகுதியிலுள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வந்தாா். ரமேஷ் தனது உறவினரான திட்டக்குடி வட்டம், லட்சுமணபுரம் காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகள் கலாவை (18) பைக்கில் உடன் அழைத்துக்கொண்டு வி.கூட்டுச்சாலையில் இருந்து லட்சுமணபுரம் காட்டுக்கொட்டாய் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

காளசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே இவா்களது பைக் சென்றபோது, எதிரே வந்த பதிவெண் இல்லாத டிராக்டா் மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கலா பலத்த காயமடைந்தாா்.

விபத்து தொடா்பாக பதிவெண் இல்லாத அந்த டிராக்டரின் ஓட்டுநா் மீது கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com