கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராயன், துணை கண்காணிப்பாளா்கள் ந.இராமநாதன், ஜி.கே.ராஜு, பி.வி.விஜிகுமாா், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் சக்தி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய ஆய்வாளா்கள், பொறுப்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும், பொது மக்களிடம் காவலா்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
இதையடுத்து, அவா் கடந்த மாதம் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜு உள்ளிட்ட காவலா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.