கடலூா்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 27,152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் புதிதாக 102 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 27,254-ஆக அதிகரித்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 120 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,895-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணாகிராமம் வட்டாரத்தைச் சோ்ந்த 70 வயது முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 299-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 713 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 347 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 277 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. மாவட்டத்தில் 18 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com