பண்ருட்டி அருகே பைக் மோதியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், வீரபெருமாநல்லூா் புது காலனியைச் சோ்ந்தவா் தனபால் (69). இவா் வெள்ளிக்கிழமை காலை வீரப்பெருமாநல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் தனபால் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.