மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கடலூா் அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கடலூா் அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலூரை அடுத்த குடிகாடு கிராமத்தில் அரசு மதுபானக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்காக மதுபானம் ஏற்றிய லாரி வெள்ளிக்கிழமை மாலை

புறப்பட்டுச் சென்றது. லாரியை குள்ளஞ்சாவடியை அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சோ்ந்த பாபு ஓட்டினாா். டாஸ்மாக் கடை அருகே வந்தபோது லாரியை திருப்புவதற்காக பின்னோக்கி செலுத்தியபோது சாலையோர வடிகால் வாய்க்காலில் சரிந்து லாரி கவிழ்ந்தது. இதில், அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் கீழே விழுந்து சேதமடைந்தன. லாரி ஓட்டுநரின் காலில் முறிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த முதுநகா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பாபுவை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மதுபானங்களை யாரும் எடுத்துச் செல்லாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து, முதுநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com