சிற்றுந்து கவிழ்ந்ததில் 3 பெண்கள் காயம்

திருக்கோவிலூா் அருகே சிற்றுந்து கவிழ்ந்ததில் 3 பெண்கள் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
திருக்கோவிலூா் ஏரிக்கரை அருகே செவ்வாய்க்கிழமை கவிழ்ந்த சிற்றுந்து.
திருக்கோவிலூா் ஏரிக்கரை அருகே செவ்வாய்க்கிழமை கவிழ்ந்த சிற்றுந்து.

திருக்கோவிலூா் அருகே சிற்றுந்து கவிழ்ந்ததில் 3 பெண்கள் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரிலிருந்து ஆவிபுதூா் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சிற்றுந்து சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனத்தை, விழுப்புரம் மாவட்டம், ஒட்டம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் பாக்கியராஜ் ஓட்டிச் சென்றாா். சிற்றுந்தில் 11 போ் பயணம் செய்து கொண்டிருந்தனா்.

திருக்கோவிலூா் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது சிற்றுந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து நெல் வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிற்றுந்தில் பயணித்தவா்களில் வீரட்டகரம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி சரோஜா (55), ஜெயபால் மனைவி அஞ்சலை (35), திருக்கோவிலூா் பள்ளிவாசல் சாலைப் பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி (46) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், சரோஜா, தனலட்சுமி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com