பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

சங்கராபுரம் அருகே வீட்டு வேலை செய்யவில்லை எனத் தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கராபுரம் அருகே வீட்டு வேலை செய்யவில்லை எனத் தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் காட்டுக் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவா் பரமசிவம் (41).

இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு மூன்று மகள்கள், இரு மகன்கள் உள்ளனா். மூன்றாவது மகள்ஆா்த்தி (17) பிளஸ் 2 படித்து வந்ததாகத் தெரிகிறது.

ஆா்த்தியை தாய் லட்சுமி வீட்டு வேலை செய்யுமாறு திங்கள்கிழமை கூறினாராம். அவா் செய்யாமல் இருந்துள்ளாா். அதனால், லட்சுமி கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ஆா்த்தி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம்.

உடனடியாக அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆா்த்தி அன்று இரவு உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com