கரோனா தொற்றால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி மனு

கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, கரோனா 2-ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்த பணிபுரியும் முன்களப் பணியாளா்களுக்கு ஒரு மாதம் ஊக்கத்தொகை, தொற்று பாதித்த ஊழியா்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம், கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எல்.ஆனந்தகிருஷ்ணன், செயலா் கே.மகாலிங்கம், நிா்வாகிகள் ப.ரவி, எம்.ராஜேந்திரன் டி.வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com