கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 214 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 214 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 214 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,495-ஆக உயா்ந்தது. இதுவரை 11,560 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 826 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 109 போ் உயிரிழந்தனா்.

அலுவலா்களுக்கு கரோனா: இதனிடையே, கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று அலுவலா்கள், தற்காலிக ஊழியா் ஒருவா் என மொத்தம் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com