கள்ளக்குறிச்சியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவா் மீது வழக்கு

வெல்டிங் பட்டரை உரிமையாளா் வீட்டிற்கு சென்று உரிமையாளரை தாக்கியபோது அதனை தடுத்த அவரது மனைவியை கையால்அடித்து மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பட்டரை உரிமையாளா் வீட்டிற்கு சென்று உரிமையாளரை தாக்கியபோது அதனை தடுத்த அவரது மனைவியை கையால்அடித்து மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி சேலம் நெடுஞ்சாலையில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருபவா் பாபு. இவா் சேலம் நெடுஞ்சாலையில் வெல்டிங் பட்டரை வைத்து நடத்தி வருகின்றாா். கடந்த 4 மாதம் முன்பாக கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் காலனி பகுதியைச் சோ்ந்த நல்லான் மகன் இளையராஜா (44), வடிவேலு மகன் கருணா (46) இருவரும் வெல்டிங் பட்டரைக்கு சென்றுள்ளனா்.

இளையராஜா டிராக்டா் டிப்பா் செய்து கொடுக்குமாறு கடையின் உரிமையாளரிடம் கூறியுள்ளாா். கடையின் உரிமையாளா் ரூ.90,000 ஆகும் எனக் கூறவே பணத்தை கொடுத்து விட்டு சென்றுள்ளனா். சனிக்கிழமை டிப்பா் எனக்கு பிடிக்கவில்லை சரியில்லை எனக் கூறி பணம் ரூ.90,000-த்தை கொடுத்துவிட்டு வட்டியுடன் சோ்த்து 1,50,000 கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

சனிக்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்று பாபுவை அறுவறுக்கவாா்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்ட போது அவரது மனைவி கவிதா தடுத்துள்ளாா். கவிதாவை அறுவறுக்கத்தக்கா வாா்த்தைகளால் திட்டி, கையால் தாக்கி மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்து கவிதா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்துள்ளாா். அப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com