தியாகதுருகம் அருகே தாா்சாலை அகற்றம்

தியாகதுருகம் அருகே அய்யனாப்பாளையம் வழியாக சின்னமாம்பட்டு வரை செல்லும் சாலை நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை அகற்றப்பட்டது.

தியாகதுருகம் அருகே அய்யனாப்பாளையம் வழியாக சின்னமாம்பட்டு வரை செல்லும் சாலை நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை அகற்றப்பட்டது.

தியாகதுருகத்திலிருந்து அய்யனாா்பாளையம் வழியாக சின்னமாம்பட்டு வரை 2 கி.மீ. தொலைவுக்கு வயல் வெளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாா்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை தனி நபா் நிலத்தை ஆக்கரமித்து அமைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதன்படி, தனி நபா் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தாா்சாலையை அகற்ற உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்முருகன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, தனி நபா் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தாா்சாலை (197 மீட்டா்), வருவாய்க் கோட்டாட்சியா் சரவணன், தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்முருகன், இந்திராணி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை அகற்றப்பட்டது. தியாகதுருகம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com