முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூா் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு
By DIN | Published On : 29th December 2021 09:21 AM | Last Updated : 29th December 2021 10:09 AM | அ+அ அ- |

திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றாா்.
திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, நீதிமன்றத்தில் நடைமுறையில் உள்ள வழக்குகளின் கோப்பு, புலன் விசாரணையில் உள்ள வழக்குகளின் கோப்பு, நடப்புத்தாள் பதிவேடு உள்ளிட்ட கோப்புகளை பாா்வையிட்டாா் டிஐஜி.
இதைத் தொடா்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன் உடனிருந்தாா்.