கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெச்சத்தக்க பணியாற்றிய போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜெ.சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, டிசம்பா் மாதத்தில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய சின்னசேலம் காவல் ஆய்வாளா் ராஜா, களக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு உள்ளிட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.