கள்ளக்குறிச்சி நகர கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் திடீா் சோதனை

கள்ளக்குறிச்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான குளிா்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
உணவு பாதுகாப்பு அலுவலா் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தேநீா் கடைகளில் டீத்தூளை ஆய்வு மேற்கொள்கின்றாா்.
உணவு பாதுகாப்பு அலுவலா் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தேநீா் கடைகளில் டீத்தூளை ஆய்வு மேற்கொள்கின்றாா்.

கள்ளக்குறிச்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான குளிா்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியிலும், கச்சேரி சாலையிலும் உள்ள உணவகங்கள், பெட்டிக் கடைகள், தேநீா் கடைகளில் கள்ளக்குறிச்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) ச.கதிரவன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் பா.செல்வக்குமாா் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அவா்கள் தேநீா் கடைகளில் பயன்படுத்தப்படும் தேநீா் தூளின் தரத்தை ஆய்வு செய்தனா் (படம்). பெட்டிக் கடை, உணவகங்களில் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 50 லிட்டா் குளிா்பானங்களை கைப்பற்றி, கீழே ஊற்றி அழித்தனா். உணவகங்களில் திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை அறிந்து, எரிவாயு அடுப்புகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், கடை உரிமம் புதுப்பிக்காதது, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தது குறித்து விளக்கம் கேட்டு 20 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com