கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது விலக்கு சோதனையின்போது 5,700 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.
கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊறலை அழிக்கும் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன்.
கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊறலை அழிக்கும் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன்.

கல்வராயன்மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது விலக்கு சோதனையின்போது 5,700 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ரேவதி, கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன், சின்னசேலம் காவல் ஆய்வாளா் ராஜா, திருக்கோவிலூா் மது விலக்கு காவல் உதவி ஆய்வாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா் கல்வராயன்மலைப் பகுதிகளான மான்கொம்பு, கொணக்காடு, விளாம்பட்டி புதூா், மேல்பாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முள்புதா்களில் பாரல்களில் மறைத்து வைத்திருந்த சுமாா் 5,700 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டறிந்து அழித்தனா். மேலும், இது தொடா்பாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com