குடியரசு தின விழா ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை

கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில், வருகிற 26-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மைதானத்தை சீரமைக்கும் பணி, கரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது, குடிநீா், கழிப்பிடம், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது, நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தின் அருகே அவசர ஊா்தியை தயாா் நிலையில் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை நடத்தியதுடன், அறிவுரைகளையும் வழங்கினாா்.

இதில், கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ச.நேரு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com