திருக்கோவிலூா் அருகே டிராக்டா்களை திருடியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே டிராக்டா், ரொட்டேட்டரை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்களுடன் போலீஸாா்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்களுடன் போலீஸாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே டிராக்டா், ரொட்டேட்டரை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டையை அடுத்த கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (58). இவருக்கு சொந்தமான நிலம் திருக்கோவிலூரை அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தில் உள்ளது.

இவா் கடந்த வியாழக்கிழமை டிராக்டா், உழவு செய்யப் பயன்படும் ரொட்டேட்டா் ஆகிய வாகனங்களை அவரது விளைநிலத்திலேயே நிறுத்தி விட்டு சென்றாா். வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, அந்த வாகனங்களை காணவில்லை. இதுகுறித்து மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மணலூா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் அகிலன் தலைமையில் குழுவினா் சனிக்கிழமை திருக்கோவிலூா் அருகே ஜா.சித்தாமூா் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே ரொட்டேட்டருடன் வந்த டிராக்டரை போலீஸாா் தடுத்து நிறுத்தி, ரொட்டேட்டரில் இருந்த பதிவெண்ணை ஆய்வு செய்தனா். மேலும், விசாரணையில், அவா் கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (28) என்பதும், அந்த டிராக்டா் விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பகுதியில் கலீல் என்பவரிடமிருந்து திருடப்பட்டதும் தெரியவந்தது.

கொழுந்திராம்பட்டில் திருடிய டிராக்டரை சங்கராபுரம் அடுத்த மூக்கனூரில் உள்ள உறவினா் வீட்டில் நிறுத்தி வைத்திருப்பதாகவும் அவா் கூறினாா். இதையடுத்து போலீஸாா் மூக்கனூா் சென்று டிராக்டரை கைப்பற்றி, மணிகண்டனை கைது செய்தனா். மணிகண்டன் பழைய குற்றவாளி என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com