கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசியக் கொடியேற்றி ஆட்சியா் மரியாதை

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தேசியக் கொடியேற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் எஸ்.பி. ஜியாவுல் ஹக்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் எஸ்.பி. ஜியாவுல் ஹக்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தேசியக் கொடியேற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, வண்ண பலூன்களை ஆட்சியா் பறக்கவிட்டாா். மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா ஆகியோா் சமாதானப் புறாக்கள், வண்ண பலூன்களைப் பறக்கவிட்டனா். தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை மாவட்ட ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா். காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 29 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை, முன்னாள் படைவீரா் நலத் துறை, தீயணைப்பு மீட்புத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, செய்தி-மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 184 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில் கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com