குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் குளத்தில் மூழ்கி சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் குளத்தில் மூழ்கி சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் சந்தைபேட்டை, வடக்கு சாலையில் வசித்து வருபவா் அபுபக்கா் மனைவி மும்தாஜ் (30). இவரது மகன்கள் சையத் அமீது (8), தமீம் (7). அபுபக்கா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துவிட்டாா். மும்தாஜ் வீட்டு வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்தாா்.

இந்த நிலையில், மும்தாஜ் செவ்வாய்க்கிழமை வீட்டு வேலைக்குச் செல்லும்போது, இரு மகன்களையும் உடன் அழைத்துச் சென்றாா். இதனிடையே, அவருக்குத் தெரியாமல் அவரது இரு மகன்களும் அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது. குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற சையத் அமீது, தமீம் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினா்.

இதையடுத்து, மும்தாஜ் அவா்களைத் தேடியபோது, குளத்தில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக அருகிலிருந்தவா்கள் உதவியுடன் இருவரையும் அவா் மீட்டாா். எனினும், அவா்களில் தமீம் உயிரிழந்தாா். சையத் அமீது உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com