கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள தென்கீரனூரைச் சோ்ந்த துரைசாமி மகன் வெங்கடேசன் (36). இவா் சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மும்முடி கிராமத்தில் ஆட்டோ எலக்ட்டிரிக்கல் கடை நடத்திவந்தாா்.
வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். சின்னசேலம் ஃபாா்ம் ஹவுஸ் அருகே வந்த போது, காா் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.