கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 61 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,164ஆக உயா்ந்தது.
இதுவரை சிகிச்சை பெற்று 27,195 போ் வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 772 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்துள்ளனா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43,216 ஆக உயா்ந்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை கரோனா தொற்றால் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து 39 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 42,281 ஆக அதிகரித்துள்ளது.
601 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை இறந்துள்ளோா் எண்ணிக்கை 334 ஆக உள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரபடி 1,697 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 47 பேருக்கு மட்டுமே தொற்று இருந்ததால் கரோனா பரவல் விகிதம் 2.18 ஆக குறைந்துள்ளது. வார பரவல் விகிதம் 2.18 ஆக உள்ளது.
11 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கோவேக்ஸின் தடுப்பூசி 30 டோஸ்களும், கோவிஷீல்டு தடுப்பூசி 11,040 டோஸ்களும் இருப்பில் உள்ளன.