மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று கரோனா தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், சின்னசேலம், உளுந்தூா்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய 6 வட்டங்களையும் சோ்ந்த மக்கள், அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும், சின்னசேலம், மணலூா்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூா், தியாகதுரும், உளுந்தூா்பேட்டை, வடக்கநந்தல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பேரூராட்சி அலுவலகங்களிலும், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்திலும் மற்றும் அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாற்றுத் திறனாளிகள், இந்த முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com