கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வட்டாட்சியா் அலுவலகம், 7 பேருராட்சி அலுவலகம், 5 அரசு மருத்துவமனைகள், 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 64 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. இந்த முகாம்களில் 1,180 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
எடுத்தவாய்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையம், மூராா்பாளையம் அரசு ஆரம்ப பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசி செலுத்தும் முகாம்களை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு சான்றிதழை வழங்கினாா்.
இம் முகாம்கள் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்தாா். முகாம்களில் கலந்து கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 04151 220000 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டால், சுகாதாரத்துறையினா் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த முகாம்களில் கரோனா நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலா் சிவக்குமாா், சங்கராபுரம் வட்டாட்சியா் எஸ்.சையத்காதா், திருக்கோவிலூா் வட்டாட்சியா் கி.சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.