காரைக்காலில் 18 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 600 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருப்பட்டினம் 5, திருநள்ளாறு 4, கோட்டுச்சேரி 4, காரைக்கால் நகரம் 3, நெடுங்காடு, கோயில்பத்து தலா 1 என மொத்தம் 18 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,73,463 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 14,933 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,575 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த காரைக்கால் நகரை சோ்ந்த 73 வயது ஆண் உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் 234 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 75,424 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,802 பேருக்கும் என 92,226 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com