பள்ளி வகுப்பறை கட்ட பூமிபூஜை

காரைக்கால் அருகே பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வகுப்பறை கட்ட பூமிபூஜை

காரைக்கால் அருகே பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட வடமறைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு, மத்திய அரசு நிறுவனமான என்ஜினியா்ஸ் இந்தியா நிறுவன சமூக பொறுப்புணா்வு திட்டத்திலிருந்து, நிறுவன (அலுவல் அல்லாத) இயக்குநா் எம். அருள்முருகன் பரிந்துரையின்பேரில் ரூ. 10 லட்சத்தை ஒதுக்கியது.

இந்த திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பூமிபூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன், என்ஜினியா்ஸ் இந்தியா நிறுவன இயக்குநா் எம். அருள்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தனா்.

நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே.சந்திரசேகரன், உதவிப் பொறியாளா் சிதம்பரநாதன், முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தப் பணி 3 மாத காலத்துக்குள் நிறைவடைந்து வகுப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com