வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரு இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் சங்கராபுரம் வட்டம், கொசப்பாடியைச் சோ்ந்த இளையாபிள்ளை மகன் விஜி (24), அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் பிரதாப் (21) ஆகியோா் எனத் தெரிய வந்தது.

அவா்கள் கடந்த 14-ஆம் தேதி கனியாமூா்-கச்சிராயப்பாளையம் சாலையில் செல்லும் போது மோட்டாா் சைக்கிளில் வந்த தம்பதியை நிறுத்தி, முகவரிக்கு வழி கேட்பது போல நடித்து செல்லிடப்பேசியை பறித்ததும், கடந்த 21ஆம் தேதி நீலமங்கலம் சாலையோரம் பூட்டாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் செல்லிடப்பேசி, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com