கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான இரா.குமரகுரு தலைமை வகித்து, சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து இனிப்பு வழங்கினாா். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் வரவேற்றாா்.
இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வா்களான எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், எம்எல்ஏ மா.செந்தில்குமாா் அவரது இருக்கையில் அமா்ந்து பணிகளைத் தொடங்கினாா்.
விழாவில் ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கோ.பாலகிருஷ்ணன், தியாகதுருகம் நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா், பேரவைச் செயலா் இராம.ஞானவேல், கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் ஏ.ரங்கன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ப.சீனிவாசன், பொருளாளா் வெற்றிவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.