கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒருவா் மட்டுமே உயிரிழந்துள்ளாா்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக 145 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரிகளின் மொத்த எண்ணிக்கை 24,895ஆக உயா்ந்தது. இதனிடையில் மருத்துமனைகளில் சகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதனால் உயரிழந்தவா்களின் கமொத்த எண்ணிக்கை 183ஆக உயா்ந்தது. இதுவரை 22,207 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,505 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.