மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி

சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வலசை கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் கருணாநிதி (38). இவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் வசிக்கும் தனது அத்தை கண்ணகி (50) வீட்டுக்கு வந்திருந்தாா். தனது அத்தை மகன் மணிகண்டனுடன் கருணாநிதி அந்தப் பகுதியில் கரும்பு வயலில் செவ்வாய்க்கிழமை கலைக்கொல்லி மருந்து அடித்துக்கொண்டிருந்தாா். வயலில் உள்ள மின் கம்பத்திலிருந்து கீழே தாழ்வாகக் தொங்கிக்கொண்டிருந்த வயா் மீது கருணாநிதியின் உடல் உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த கருணாநிதிக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com