கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கான

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று உளுந்தூா்பேட்டை தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையொட்டி, 4 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகங்களிலிருந்து 200 மீட்டா் தொலைவு முன்பு எல்லைக் குறியீடு வரையப்பட்டிருந்தது. இந்த எல்லைக்குறியீட்டைக் கடந்து வேட்பாளருடன் முன்மொழிபவா் மட்டுமே செல்ல வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தோ்தல் நடத்தும் அலுவலகம் முன் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமையில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ச.முருகேசன், உதவி ஆய்வாளா்கள் இரா.ஆனந்தராசு, சு.மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மற்ற தொகுதிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com